வியாழன், 22 செப்டம்பர், 2011

ஆளும் கட்சியின் கைப்பாவையா தேர்தல் ஆணையம்?

தமிழக மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட (ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்) உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர், இன்றே (22.09.2011) வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த, தேர்தல் தேதி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. அதேநேரத்தில் புதிய குழப்பங்களும், கேள்விகளும் ஏராளமாய் எழுந்துள்ளன.


1. வழக்கமாக வேட்பாளர் தேர்வுக்காக குறைந்தது ஒருவார கால அவகாசம் அளித்து, வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்படும் நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்ட 14 மணிநேரத்தில் மனுத்தாக்கல் தொடங்க வேண்டிய அவசியம் என்ன?
2. அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் ஒருவாரத்திற்குள் வேட்பாளர்கள் நேர்காணல், தேர்வு உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு அனைவரும் மனுத்தாக்கல் செய்யமுடியுமா?
3. பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கான மாநகராட்சிகள் எவை? பொதுப்பிரிவினருக்கான மாநகராட்சிகள் எவை? என்பதும் இன்றுவரை தௌ¤வாக அறிவிக்கப்படாததால் வேட்பாளர்களை அறிவிப்பது எப்படி?
4. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிவடையாத நிலையில் வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதால் குளறுபடிகளுக்கு வழிவகுக்காதா?
5. முதல்கட்டத் தேர்தலுக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கும் (அக்.17, 19) ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் கள்ளஓட்டு பதிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
6. ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால் ஒருவர் இருமுறை வாக்களிக்கும் ஆபத்து.
7. இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதா?

இப்படி நீண்டுகொண்டே செல்லும் குழப்பங்களின் பட்டியல் ஒருபுறம் இருந்தாலும் அ.தி.மு.க மட்டும் எப்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதைப்போல் ஆளும்கட்சிக்கு மட்டும் உள்ளாட்சி தொகுதிகள் குறித்த முழுப்பட்டியல் கொடுக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. சசிகலாவுக்கு நெருக்கமானவர் என்று குற்றம்சாட்டப்பட்ட சோ. அய்யரை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்தபோதே, அவர் அ.தி.மு.க.வின் விசுவாசியாக செயல்படுவார் என்று புகார்கள் கூறப்பட்டன. அது உண்மையாவதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. அப்படியானால் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு என்பதெல்லாம் பொய்யா??????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக