வியாழன், 23 ஜூன், 2011

கனிமொழிக்கு கலைஞர் கொடுத்த முறுக்கு...!

திகார் சிறையின் 6வது வார்டு, வீல் சேரில் அமர்ந்தபடி கருணாநிதியும், அருகிலேயே ராசாத்தியம்மாளும் காத்திருக்க, அங்கு அழைத்துவரப்பட்டார் கனிமொழி. அவரை பார்த்ததும் கண்கலங்கிய கருணாநிதி, கையோடு கொண்டுபோயிருந்த முறுக்கு பாக்கெட்டுகளை (ரொம்ப முக்கியம்! அப்படி எல்லாம் கேட்கக்கூடாது) கனிமொழியிடம் கொடுத்தார்.

வாழ்க்கையிலேயே முதல்முறையாக அப்பாவின் கையால் கொடுத்த முறுக்கை வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் கனிமொழி பெற்றுக்கொண்டார். வீட்டில் சுட்ட (சமைத்த) இட்லி,தோசையும் கொடுக்கப்பட்டது.

சுமார் 20 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்த கருணாநிதி ஒருகட்டத்தில் கண்ணாடியை கழற்றியபோதுதான் தெரிந்தது அவர் கண்ணீர் விட்டு அழுதது. இதனை பார்த்த கனிமொழி அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.



எத்தனையோ வழிகளில் முயற்சித்தும் கனிமொழிக்கு பிணை (Bail) வாங்கித் தரமுடியவில்லையே என்ற ஆதங்கமே அவரது அழுகைக்கு காரணமாக இருக்கலாம்.