ஞாயிறு, 21 ஜூன், 2009

அன்புடையார் எல்லாம் உடையவரா...?

அன்புடையார் எல்லாம் உடையார் என்றார் திருவள்ளுவர்
ஆனால் இன்றைய உலகில் அன்பை (மட்டும்) வைத்து சகமனிதனின் அன்பை பெறுவதே கடினமாகிவிட்டது...
இன்றைய காலத்தில் நீங்கள் அன்பை பெறவேண்டும் என்றால்
உங்களால் அவருக்கு (அன்பு செலுத்துவோருக்கு) ஏதாவது ஒரு பிரதிபலன் (அன்பை தவிர) இருக்க வேண்டும்...
இந்த உண்மையை உணர யாராவது ஒருவரிடம் அன்பை மட்டும் காட்டுங்கள்...
அப்போது தெரியும் அன்பின் மதிப்பு...!(?)
அது யாராக இருந்தாலும் சரி...
நீங்கள் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்தரக்கூடிய நிலையில் இருந்தால் மட்டுமே
உங்களுக்கு அன்பு கிட்டும்...
நீங்கள் அடுத்தவர் மீது காட்டும் அன்பிற்கும் பயன் இருக்கும்...
இதை மனதில் வைத்து எப்போதும் செயல்படுவோம்...
திருவள்ளுவரின் வாக்கை மெய்யாக்குவோம்....

சனி, 6 ஜூன், 2009

"போலி"

போக்கிரிகளைவிட ஆயிரம் மடங்கு கீழ்த்தரமானவன் "போலி"...
இங்கே போலிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது நமது கடமை...
உன்னை சுற்றி எது நடந்தாலும், ஏன்? எதற்கு? என காரணம் கேள்,
போலிகளை நீ எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்...
"எல்லாம் செய்வேன் என்பவன் எதையும் செய்யமாட்டான் "
என்ற ஒற்றை வரியை எப்போதும் நினைவில் கொள்...
நீ நிச்சயம் ஈமாறமாட்டாய்...
அப்படியே நீ ஏமாற்றப்பட்டாலும்
உன்னை ஏமாற்றியவனின் போலித்தனத்தை உலகறிய செய்...
அப்போதுதான் மீண்டும் ஒரு போலி உருவாகாது ....