திங்கள், 27 டிசம்பர், 2010

என்ன செய்து கிழித்தாய்...?


இன்று காலை வழக்கம் போல் வீட்டுக் காலண்டரை கிழித்தபோதுதான் தெரிந்தது இந்த வருடத்தில் இன்னும் 5 நாட்கள் மட்டுமே மிச்சமிருப்பது. அட ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிடுச்சா என ஆச்சர்யபட்டபோதுதான் என்னை பார்த்து காலண்டர் கேட்டது (படபடவென பறந்தபடி) “ இந்த ஒரு வருடத்தில் என்ன கிழிச்சிட்ட நீ என்னத்தவிர” . இந்த கேள்விக்கான பதிலை பல மணிநேரம் யோசித்தபோதும் உருப்படியா எதுவும் கிழித்தது போல் தோன்றவில்லை. 360 நாட்களுக்கு முன்பு புத்தாண்டு கொண்டாடியபோது என்ன நினைத்தோம்...! அதில் என்னவெல்லாம் செய்து முடித்தோம்...! என்று யோசிக்கிறேன்,யோசிக்கிறேன், யோசிக்கிறேன், இன்னும் யோசிக்கிறேன்... ம்ம்ம்... எதுவும் செய்யல... சரி அடுத்தவருடமாவது இதையெல்லாம் செஞ்சிருவோம்!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக