வெள்ளி, 10 ஜூலை, 2009

செயல்...

நான் செய்வது சரி... இது தன்னம்பிக்கை
நான் செய்வது சரிதான்... இது சமாதானம்
நான் செய்வதுதான் சரி... இது ஆணவம் அல்லது அழிவின் ஆரம்பம்...
ஒரு செயல் சரியாய் தவறா என்பது
செய்யும் நபர்,விதம், செய்வதற்கான காரணம்,
செயல் நடைபெறும் இடம், செயலின் சூழல்
போன்றவற்றை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.
எனவே ஒரு செயலை செய்யும்முன்
காரணகாரியங்களை கருத்தில்கொண்டு செய்ய வேண்டும்.
எவன் ஒருவன் தன் செயலில் முழு நம்பிக்கை வைக்கிறானோ
அவன் தவறு செய்யமாட்டான்.
தான் செய்யும் செயல் அனைத்திற்கும்
சமாதானம் கூறுபவனோ மற்றவர்களை ஏமாற்றுவதாய்
நினைத்துக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வான்.
ஆனால்
நான் செய்வதுதான் சரி
என்பவன் அழிவின் வாசலில் அடியெடுத்து வைக்கிறான்...
எப்போதும் அழிவை நோக்கி செல்வதை தவிர்ப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக